திருப்பூரில் 9 வயது மாணவிக்கு டெங்கு பாதிப்பு - மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு காய்ச்சல் முகாம்

திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் 4ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் பள்ளியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவமழை காரணமாக தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நெசவாளர் காலனி பகுதியில் செகண்ட்ஸ் குடோனில் வேலை செய்து வருகிறார்.

இவரது மகள் அழகு மீனாட்சி, திருப்பூர் பி.என்.சாலை நெசவாளர் காலனி மாநகராட்சிப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் சரியாகவில்லை.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அழகு மீனாட்சிக்கு புதன்கிழமை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் அவரது பெற்றோர், தங்கள் சொந்த ஊரான மதுரை மாவட்டத்திற்கு மாணவியை அழைத்துச் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக மாணவி அழகு மீனாட்சியின் தந்தை பாண்டியன் தெரிவித்துள்ளார்.



இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், பள்ளியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.



மாநகர் நல அலுவலர் கெளரி சரவணன் தலைமையிலான சுகாதாரத்துறை ஊழியர்கள் பள்ளி வளாகத்தில் கொசு மருந்து அடித்தும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம், காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...