தொடரும் வறட்சியும், விவசாயிகள் மரணமும்- நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள் ?


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து பல லட்சம் விவசாய நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

மேலும், குடிநீருக்குக்கூட தற்போது பஞ்சம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் சிறமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வறட்சியினால் விவசாயம் பொய்த்துப்போனதால் தற்போது வரை தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மன வேதனையில் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாய சங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தாலும் தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து முழுத்தீர்வினை எட்டவில்லை.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெரிஞ்சிபேட்டை என்னும் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பிலான பருத்தி செடி வறட்சியின் காரணமாக காய்ந்து போனதை கண்டு மனவேதனையில் ராஜேந்திரன் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியினையும்  ஏற்படுத்தியுள்ளது. இனியும் வறட்சியின் காரணத்தால் விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...