குன்னூர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு எருமையால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் அருகே இன்று திடீரென நுழைந்த காட்டு எருமை அப்பகுதியை சுற்றி வலம் வந்தது. 



தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த புற்கள் மற்றும் குப்பைகளை உண்ட காட்டெருமை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வனவர் சவுந்தராஜன், பாபு, காவல் துறையை சேர்ந்த ரவி ஆகியோர் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

நீலகிரி வனப் பகுதியில் மழை பொய்த்துப்போய் வறட்சி நிலவிவருவதால் நீர், உணவு உள்ளிட்டவற்றைத் தேடி தற்போது அதிகளவிலான காட்டெருமை, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 

மேலும், தற்போது கோடை காலமும் துவங்கவுள்ள நிலையில் அதிகளவிலான காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம் எனவும், இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் எனவும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகளுக்கு தகுந்த நீராதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...