குன்னூர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு எருமையால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் அருகே இன்று திடீரென நுழைந்த காட்டு எருமை அப்பகுதியை சுற்றி வலம் வந்தது. 



தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த புற்கள் மற்றும் குப்பைகளை உண்ட காட்டெருமை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வனவர் சவுந்தராஜன், பாபு, காவல் துறையை சேர்ந்த ரவி ஆகியோர் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

நீலகிரி வனப் பகுதியில் மழை பொய்த்துப்போய் வறட்சி நிலவிவருவதால் நீர், உணவு உள்ளிட்டவற்றைத் தேடி தற்போது அதிகளவிலான காட்டெருமை, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 

மேலும், தற்போது கோடை காலமும் துவங்கவுள்ள நிலையில் அதிகளவிலான காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம் எனவும், இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் எனவும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகளுக்கு தகுந்த நீராதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...