கோவை, சேலம் மாநகராட்சிகளில் உள்ளது போல திருப்பூருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக்கோரி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 60 கழிவுநீர் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 150 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் வாகனங்களில் ஏற்றும் கழிவு நீரை விவசாய நிலங்களில் உரமாக இறக்கி விட்டு வருகின்றனர். அவ்வப்போது இப்படி விடப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தங்கள் வாகனங்களில் ஏற்றும் கழிவு நீரை விவசாய நிலங்களில் உரமாக இறக்கி விட்டு வருகின்றனர். அவ்வப்போது இப்படி விடப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.