தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது!


தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது என அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

கோவையில் சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழ்நாடு தற்போது உள்ள நிலைபாட்டில் தகுதியான முதல்வர் இல்லாமல் இருக்கிறது. இதுப்பற்றி அதிமுக கட்சி கலந்து ஆலோசனை செய்யவேண்டும். தமிழக மக்கள் கடந்த 8 மாதங்களாக பெரும் பிரச்சனைகளை சந்தித்து  வருகின்றனர். முன்னாள் தமிழக முதலவர் மறைவில் மர்மம், மத்திய அரசின் 500, 1000 ரூபாய் செல்லாத அறிவிப்பு, ஜல்லிக்கட்டு, ஜாதி கலாவரம், கடலில் ரசாயனம் கலப்பு மற்றும் கொலை, கொள்ளை அதிகரிப்பு போன்ற இன்னல்களால் பொதுமக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை, சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

ஒருபக்கம் வறட்சியில் விவசாயிகள் தற்கொலை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார பாதிப்பினால் சாமானிய மக்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இதுபோன்ற சூழலில் தமிழக மக்களுக்கு தகுதியான முதல்வர் இல்லையென்றால் மக்களே இதற்கான தீர்வுகளை காண முற்படுவர். கூடிய விரைவில் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் நிலவும். தற்போது தமிழகம் உள்ள நிலைமையில் மதவாதம் இல்லாத அரசு உருவாக  வேண்டும், அதுவரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு அளிக்காது.

 இவ்வாறு, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அப்துல் காதர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...