பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்களுக்கான தொழில்.முனைவோர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி வரும் பிப்.16ல் துவக்கம்


பி.எஸ்.ஜி  கலை அறிவியல் கல்லூரி, கோவை எப் ஐ சி சி ஐ மகளிர் அமைப்பு ஆகியவை இணைந்து தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டப் பயிற்சியினை வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் நடத்தவுள்ளது.

அகமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இ டி ஐ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது. என் எஸ் டி இ டி பி, டி எஸ் டி ஆகிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு நிதிவுதவி அளித்துள்ளனர். 

இப்பயிற்சியானது தொழிலை திறம்பட நடத்துவது, நிதி பெரும் திட்டங்கள், தொழிலை தேர்ந்தெடுத்தல் மற்றும் அத்தொழிலின் வளர்ச்சியை அடைதல், தொழில் முனைவோர்களுக்கான திறன், திட்டம் குறித்து அறிக்கை தயாரித்தல், சந்தை குறித்து ஆராய்தல், தொழிலை நிர்வகித்தல் மற்றும் வரி குறித்தான நடைமுறைகள் ஆகியவை குறித்து இப்பயிலறங்கில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெற பி.எஸ்சி, பி.டெக், பிஇ பட்டதாரிகள், அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோவில் 2 மற்றும் 3 வருட பயிற்சி மேற்கொண்டவர்கள் என 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பங்குபெறலாம்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அவர்களது முழு விபரங்களையும் [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...