வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாமல் சுற்றும் காட்டு யானை - வைரலாகும் வீடியோ!

வால்பாறை-சாலக்குடி ரோட்டில் தும்பிக்கை இல்லாமல் நடமாடும் குட்டி யானை குறித்து, கேரள வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் குட்டி யானை ஒன்று தாய் யானையின் அரவணைப்பில் சுற்றி வருகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்த வழித்தடத்தில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர்.

இந்நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள எண்ணபனை எஸ்டேட் பகுதியில் இரண்டு நாட்களாக குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. இந்த வழித்தடத்தில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர்.



இந்நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில், ஒரு குட்டியுடன் ஐந்து யானைகள் முகாமிட்டுள்ளன.



இந்த கூட்டத்தில் தாய் யானையுடன் தும்பிக்கை இன்றி குட்டியானை ஒன்று, உலா வருவதை சிலேஸ் சந்திரதா என்பவர் படம் பிடித்து உள்ளார். தும்பிக்கை இல்லாத குட்டி யானையின் வீடியோ, சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானைக்கு பிறவியிலேயே தும்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது பிற வனவிலங்குகள் தாக்கியதில் தும்பிக்கை இழந்திருக்கலாம். ஆனால், குட்டி யானை ஆரோக்கியத்துடன், தாய் யானையுடன் உலா வருகிறது. அந்த யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

தும்பிக்கை இல்லாமல் சுற்றி வரும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...