நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பு பதவிகளுக்கு நேர்க்காணல்

நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, நேர்க்காணல் செய்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை தலைவரும் வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன், இணை செயலாளர்கள் வி.பி.ராஜன் திப்பம்பட்டி ஆறுசாமி, கொடநாடு பொன்தோஸ் ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.



அப்போது, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்த உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தஃபா, இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...