குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா வழங்கக் கோரி அண்ணாநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அமைந்துள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அண்ணா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். மேலும், நாங்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதோடு எங்களுக்கு சொந்தமாக எவ்வித இருப்பிடமும் இல்லாமல் உள்ளோம். 

மேலும், நாங்கள வசிக்கும் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. 

இந்நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தோம்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று கோவை மாவட்ட நொய்யல் கிழக்குப் பிரிவு உதவிப்பொறியாளர் எங்களுடைய இடத்தினை 21 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என அறிவிப்பு கடிதம் கொடுத்தார்.

எங்களுக்கு இதைவிட்டால் வேறு  குடியிருப்புகள் கிடையாது. எனவே நாங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கான பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...