தாராபுரம் வந்த சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் - பொதுமக்கள் தரிசனம்

தாராபுரத்தில் வி.எச்.பி கிராம கோயில் பூசாரிகள் பேரவையில் சார்பில் அழைத்துவரப்பட்ட சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதத்திற்கு, பக்தர்கள் அபிஷேகம் நடத்திய வழிபாடு செய்தனர்.


தாராபுரம்: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தாராபுரத்திற்கு சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் அழைத்து வரப்பட்டது.

தாராபுரம் நாடார் தெருவில் உள்ள பழையூர் புதூர் பெரிய காளியம்மன் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டது.

அப்போது, பக்தர்கள் தாங்களாகவே அம்மனுக்கு மஞ்சள்நீர், பால், தயிர், இளநீர் உள்பட 10 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சினைகளும், தோஷங்களும் நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்ன குமரவேல், கோவில் பூசாரி துர்க்கேசன், ரத பூசாரிகள் பாபு, சங்கர், துரை உள்பட பக்தர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...