வால்பாறையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு!

கோவை மாவட்டம், வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தார்.



கோவை: வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப் வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று முதல் ஆய்வு செய்தார்.



இன்று வால்பாறைக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சிறுத்தை தாக்கியவரையும், கரடி தாக்கியவரையும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் சந்தித்து சிறுத்தை தாக்கிய வடமாநில தொழிலாளர் அணில் ஒரான் என்பவருக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்கி அவருடைய உடல் நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.



பின்பு இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கிய ஐயப்பன் என்பவரை சந்தித்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்து அவருடைய உடல் நலத்தை கேட்டறிந்தார். அதன் பின்பு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கிய இடத்திற்கு சென்று அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வைக்கப்பட்ட தானியங்கி கேமராவை பார்வையிட்டு மனித வன விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதை மக்களை அச்சுறுத்தாத வண்ணம் செயல்படுத்துவது என்று வனத்துறை அதிகாரியிடம் ஆலோசனை செய்தார்.

உடன் மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர், வன சரகர்கள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...