கோவையில் குழந்தையின் படுக்கையில் புகுந்த நல்ல பாம்பு - பெற்றோர் அச்சம்!

கோவை போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துவிட்டு அதனை இழுத்த போது, அதற்கு அடியில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடிவீரர் மோகன், நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டுள்ளார்.


கோவை: போத்தனூர் அருகே குழந்தைக்கான படுக்கையில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து, அந்த படுக்கையை இடம் மாற்றுவதற்காக அதனை இழுத்துள்ளார்.

அப்போது, அந்த படுக்கைக்கு அடியில் நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட தாய் குழந்தையை உடனடியாக தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியில் கொண்டு வந்துள்ளார்.

தொடர்ந்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகனுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் மோகன், குழந்தையின் படுக்கைக்கு அடியில் இருந்த நல்ல பாம்பை லாவமாக பிடித்து பிளாஸ்டிக் குடுவைக்குள் அடைத்தார். பின்னர் அந்த நல்ல பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தார்.

குழந்தையின் படுக்கையில் இருந்த பாம்பு அதிர்ஷ்டவசமாக குழந்தையை எதுவும் செய்யாமல் இருந்ததாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...