உடுமலையில் பிரதமர் மோடி சிலையை தத்ரூபமாக வடிவமைத்த மண்பாண்ட கலைஞருக்கு குவியும் பாராட்டு!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ள உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞரான ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



திருப்பூர்: பிரதமர் மோடியின் களிமண் சிலையை உருவாக்கிய உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக் கலைஞரான இவர் தீவிர ரஜினி ரசிகராவார். இதனால் ரஜினி ரஞ்சித் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

இவர் ஒவ்வொரு ரஜினி படம் தயாராகும் போதும் அந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் இந்திய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ளார்.

இதில் மோடி கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார். வெறும் மண்பாண்டங்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது பிரபலமாகும் விஷயங்களை உருவமாக செய்யும் இந்த மண் பாண்டக்கலைஞருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன்ர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...