சிற்றுண்டி திட்டத்தை வழங்க வேண்டும்…! - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்களை பனிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் தமிழக அரசை கேட்டுகொண்டனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் "முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்களை பனிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த பத்தாம் வகுப்பு தேறிய சமையலர் உதவியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் 10 ஆண்டுகள் பணி முடிந்திருந்தால் அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும், இது பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்திய நிலையில் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்போது வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



அதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...