வடுகபாளையத்தில் மது போதையில் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பறித்ததால் சாலையில் படுத்து அட்டகாசம்

மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய காரணத்தால், செல்போனை பறித்துக் கொண்டு போலீசார் தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் அதிவேகமாக மது போதையில் காரை இயக்கி சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக கூறி பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மது போதையில் காரில் வந்த நபர் அந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



மேலும் செல்போனை பறித்துக் கொண்டு தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார். மேலும் அங்கு வந்த போதை ஆசாமியின் நண்பர்கள் அந்த இருசக்கர வாகன ஓட்டியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்றுள்ளனர்.



இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே போதை ஆசாமி சாலையில் படுத்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...