தாராபுரம் அருகே ஆச்சியூரில் ஆடு திருடிய தொழிலாளி கைது – போலீசார் நடவடிக்கை

மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் பட்டியை திறந்தபோது, ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில், பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஆச்சியூரை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் ஆடுகளை பட்டியில் இருந்து மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்தார். பின்னர் மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு நேற்று காலையில் பட்டியை திறந்தார். அப்போது ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடியதாக பழனி தாலுகா பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...