கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை - மறுவாக்கு பதிவு நடத்தக்கோரி பாஜகவினர் போராட்டம்

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்களே உள்ளன. இதனைக்கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட 22 க்கும் மேற்பட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் கட்சித் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.



இந்த நிலையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டு உள்ளது.



கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்கள் உள்ளன. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். மேலும் இது ஒவ்வோரு வாக்காளர் எண்ணையும் மொபைலில் ஐ.டி யை வைத்து செக் பண்ணும் போது அதில் அந்த எண்கள் இல்லை என்றே வருகிறது என்று அதிகாரிகளிடம் கூறி உள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பா.ஜ.க வினர் சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கூறினர். பின்னர் ஒரு மணி நேரமாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் பா.ஜ.க வினர் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை முடிவில் ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் மனு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்து இந்த பூத்தில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...