கோவில்பாளையத்தில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை கோவில்பாளையம் பகுதியில், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் சௌந்தர்ராஜன் மீது வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சௌந்தர்ராஜன் (19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி வழிப்பறி வழக்கு குற்றவாளியான சௌந்தர்ராஜன் (19) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று (மே.21) சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...