கோவை வழித்தடத்தில் இயங்கும் கொச்சுவேலி-சென்னை சிறப்பு ரயிலின் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையையொட்டி கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சென்னை-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஜூன் 6, 13, 20, 27 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி-சென்னை சிறப்பு ரயில் (எண்:06044) மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...