மேட்டுப்பாளையத்தில் கருணாநிதியின் 6வது நினைவு தினம் - திமுக சார்பில் அஞ்சலி

மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் தலைமையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகர கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் முகமது யூனூஸ் மற்றும் முனுசாமி தலைமையில் இந்த நிகழ்வு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.



நிகழ்வில், கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் பணியாற்றிய கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பேசப்பட்டது. கட்சியினர் அவரது கொள்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...