ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம். வார்டு உறுப்பினர் வீட்டில் சாதி ரீதியாக அவதூறு பேசியதாக புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் அருகே உள்ள செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்ய கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குட்கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஊராட்சியின் பெண் தலைவராக சரஸ்வதி பதவி வகிக்கிறார். துணை தலைவராக பாஜகவை சேர்ந்த பாலராமநாதன் உள்ளார். மேலும் 8 உறுப்பினர்கள் காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களாக உள்ளனர். துணைத்தலைவர் பாலராமநாதனுடன் லட்சுமி (காங்கிரஸ்), முத்து பிரபாவதி, தீபவதி, சரஸ்வதி (திமுக) ஆகியோர் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சியில் சுமார் ரூ.90 லட்சத்திற்கு மேல் நிதி இருப்பதாக தெரிகிறது. குடிநீர் பற்றாக்குறை அதிகரித்ததால் ஆழ்துளை கிணறு அமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்த வார்டு உறுப்பினர்கள் தீர்மானங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் துணை தலைவர் உட்பட 5 பேர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

இதனால் நேற்று பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து தலைவரிடம் நேரில் சென்று முறையிட்டனர். தலைவர், 5 பேர் கையெழுத்திட மறுப்பதால் கடந்த 2 மாதங்களாக ஊராட்சியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு கூட மாத சம்பளம் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வார்டு உறுப்பினர் தீபா அவர்களின் வீட்டிற்கு ஆதிதிராவிட பொதுமக்கள் சென்று கையெழுத்திடுமாறு கோரினர். அப்போது தீபா, அவரது கணவர் சின்னசாமி, மகன் பரத்ராஜ் ஆகியோர் ஆதிதிராவிட மக்களை சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை அடைந்த பொதுமக்கள் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊதியூர் பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிக சாமியானா அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் கேட்டு போராடி வரும் பொதுமக்களுக்கு பதிலளிக்க குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதற்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், திமுக நிர்வாகிகள் என்றால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். செய்தி துறை அமைச்சர் தொகுதியில் திமுக நிர்வாகிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...