ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம். வார்டு உறுப்பினர் வீட்டில் சாதி ரீதியாக அவதூறு பேசியதாக புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் அருகே உள்ள செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்ய கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குட்கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஊராட்சியின் பெண் தலைவராக சரஸ்வதி பதவி வகிக்கிறார். துணை தலைவராக பாஜகவை சேர்ந்த பாலராமநாதன் உள்ளார். மேலும் 8 உறுப்பினர்கள் காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களாக உள்ளனர். துணைத்தலைவர் பாலராமநாதனுடன் லட்சுமி (காங்கிரஸ்), முத்து பிரபாவதி, தீபவதி, சரஸ்வதி (திமுக) ஆகியோர் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சியில் சுமார் ரூ.90 லட்சத்திற்கு மேல் நிதி இருப்பதாக தெரிகிறது. குடிநீர் பற்றாக்குறை அதிகரித்ததால் ஆழ்துளை கிணறு அமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்த வார்டு உறுப்பினர்கள் தீர்மானங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் துணை தலைவர் உட்பட 5 பேர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

இதனால் நேற்று பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து தலைவரிடம் நேரில் சென்று முறையிட்டனர். தலைவர், 5 பேர் கையெழுத்திட மறுப்பதால் கடந்த 2 மாதங்களாக ஊராட்சியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு கூட மாத சம்பளம் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வார்டு உறுப்பினர் தீபா அவர்களின் வீட்டிற்கு ஆதிதிராவிட பொதுமக்கள் சென்று கையெழுத்திடுமாறு கோரினர். அப்போது தீபா, அவரது கணவர் சின்னசாமி, மகன் பரத்ராஜ் ஆகியோர் ஆதிதிராவிட மக்களை சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை அடைந்த பொதுமக்கள் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊதியூர் பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிக சாமியானா அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் கேட்டு போராடி வரும் பொதுமக்களுக்கு பதிலளிக்க குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதற்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், திமுக நிர்வாகிகள் என்றால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். செய்தி துறை அமைச்சர் தொகுதியில் திமுக நிர்வாகிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...