சூலூர் அருகே பள்ளி மாணவரை கத்தியால் குத்தி கைபேசி பறித்த இருவர் கைது

சூலூர் அருகே டியூஷன் முடித்து வீடு திரும்பிய 14 வயது மாணவரை கத்தியால் குத்தி கைபேசி பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Coimbatore: சூலூர் அருகே பள்ளி மாணவர் ஒருவரை கத்தியால் குத்தி கைபேசியை பறித்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூலூர் அருகே வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டியூஷன் முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் வந்த மூன்று பேர் மாணவரை வழிமறித்து, அவரது கைபேசியை கேட்டுள்ளனர். மாணவர் மறுத்ததால், அவரை கத்தியால் குத்தி விட்டு கைபேசியை பறித்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆகஸ்ட் 31 அன்று ஐயப்பன் (29) மற்றும் தமிழ்ச்செல்வன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...