கோவை உக்கடம் மேம்பாலத்தின் சுங்கம் பைபாஸ் இணைப்பு ராம்ப்புகள் திங்கள்கிழமை திறப்பு

கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் M.K. Stalin கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.481.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 3.8 கிலோமீட்டர் நீள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கம் செல்வதற்கான ஏறு, இறங்குதளம் வாலாங்குளம் வழியே அமைக்கப்பட்டு வந்தது.



திறப்பு விழாவின் போது முழுமை அடையாமல் இருந்த இந்த இணைப்பு ராம்ப்புகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது, சுங்கம் பைபாஸ் உடன் உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய ஏறுதளம், இறங்குதளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ராம்ப்புகளில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய இணைப்பு ராம்ப்புகள் திறக்கப்படுவதால், உக்கடம் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...