கோவை கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்ட அனைத்து கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில், அண்ணா கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜி.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மணல் விற்பனையாளர்கள் ஒரு யூனிட் மணலை ரூ 10,000ம் வரை விலையை உயர்த்தி விற்கிறார்கள். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையோ ஒரு யூனிட் ரூ 650 மட்டும்தான். அத்துடன் லாரி வாடகையும் சேர்த்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வியாபாரிகள் மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார்கள். 

எனவே, சமீப காலமாக நமது மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. கட்டுமானப் பணிகள் நடக்காததால், தொழிலாளர்கள் வேலையின்றி பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பட்டினி சாவுகள் கூட நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த விசயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலூக்கா தலைநகரங்களில் மணலை இருப்பு வைத்து அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும், கோரிக்கை நிறைவேறாத சூழ்நிலை நீடித்தால் வரும் மார்ச் 1ம் தேதி கோவை டவுன்ஹால் அருகில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...